இந்திய ரயில்வே துறையை மேம்படுத்த ஆலோசனை சொல்லுங்க.. ரூ10 லட்சம் பரிசு காத்திருக்கிறது!
இந்திய ரயில்வே துறையை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகள் கேட்கப்பட்டுள்ளன.
டெல்லி: இந்திய ரயில்வே துறையை மேம்படுத்த சிறப்பான ஆலோசனைகளை தெரிவிப்போருக்கு ரூ10 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே துறையானது சிறப்பான சேவைகள் மூலம் வருவாயை ஈட்டுவதற்கான ஆலோசனைகளை பொதுமக்களிடம் கேட்டுள்ளது. இந்த ஆலோசனைகளை https://innovate.mygov.in/jan-bhagidari இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
ஆலோசனைகளை மே 19-ந் தேதிக்கு முன்னர் அனுப்ப வேண்டும். சிறப்பான ஆலோசனைகளுக்கான பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த ஆலோசனைக்கான முதல் பரிசு பெறுவோருக்கு ரூ10 லட்சம்; 2-ம் பரிசுக்கு ரூ5 லட்சம்; 3-வது பரிசுக்கு ரூ3 லட்சம்; 4-வது பரிசுக்கு ரூ1 லட்சம் என அறிவித்துள்ளது ரயில்வே. ரயில்வே துறைக்கான வருவாயை எப்படி அதிகரிக்கலாம்? சேவைகள், வர்த்தகங்கள் தொடர்பான விரிவான திட்டங்கள், எப்படி நடைமுறைப்படுத்துவது ஆகிய அம்சங்களை உள்ளடக்கியதாக ஆலோசனைகள் இருக்க வேண்டும்.