இந்திய தீவிரவாதிகளுக்கு மதிப்பே இல்லையாம்- ஐ.எஸ்.ஐ.எஸ்-சில் அரேபிய வீரர்களுக்கே முன்னுரிமை!
டெல்லி: சர்சதேச புலனாய்வுத் துறையின் அறிக்கையின் படி இந்திய மற்றும் தெற்காசிய நாட்டினைச் சேர்ந்த முஸ்லிம் பயங்கரவாதிகளை ஐ.எஸ்.ஐ.எஸ் தாழ்வான இடத்திலேயே வைத்து நம்புகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷினைச் சேர்ந்த வீரர்களை, அரேபிய வீரர்களை விட குறைவான இடத்திலேயே வைத்துள்ளதாம்.
அரேபிய வீரர்களுக்கே முக்கிய பதவிகளையும், பொறுப்புகளையும் அளித்து அதிக ஊதியமும் வழங்குகின்றதாம். மற்றவர்களை தரம் தாழ்த்தியே பார்த்து வருகின்றதாம்.
குறைந்த ஊதியம்:
தெற்காசிய வீரர்களுக்கு மிகவும் குறைவான ஊதியமும், மிகவும் சிறிய அளவிலான ஆயுதங்களையும் வழங்கி வருகின்றதாம் ஐ.எஸ்.ஐ.எஸ்.
தற்கொலைப்படைத் தாக்குதல்:
மேலும், தற்கொலைப் படை தாக்குதல்களுக்கு கூட பெரும்பாலும் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ் வீரர்களையே அந்த அமைப்பு பயன்படுத்துவதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.
அடுத்த இலக்கு:
முன்னதாக சிரியா, ஈராக்கின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் அடுத்த இலக்கு ஆப்கானிஸ்தான் என கூறப்பட்டு வருகிறது.
கதி அதோ கதிதான்:
ஆப்கானிஸ்தானில் கால் பதித்துவிட்டால் இந்தியா, பாகிஸ்தான் என தெற்காசிய நாடுகளை ஒரு கை பார்த்துவிடும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.