சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜிக்கு திடீர் நெஞ்சுவலி.. அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதி
மகளை கொலை செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
Recommended Video
மும்பை: மகளை கொலை செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து அவர் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமை பொறுப்பை வகித்து வந்தார் பீட்டர் முகர்ஜி. இவரது மனைவி இந்திராணி முகர்ஜி(46).
இந்திராணி முகர்ஜி தான் பெற்ற மகள் ஷீனா போராவை கொலை செய்ததாக கடந்த 2015-ம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். மும்பையில் நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
முறை தவறிய காதல்
பீட்டர் முகர்ஜிக்கும் அவருடைய முன்னாள் மனைவி மூலம் பிறந்த மகன் ராகுலை ஷீனா போரா முறை தவறி காதலித்ததால் இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. இதற்கு இந்திராணியின் இரண்டாவது கணவர் சஞ்சீவ் கன்னா, கார் டிரைவர் ஆகியோர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்துள்ளது.
சிறையில் அடைப்பு
இந்த கொலை வழக்கில் இந்திராணி, சஞ்சீவ் கன்னா, கார் டிரைவர் மூன்றாவது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகிய 4 பேரையும் மும்பை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 46 வயதாகும் இந்திராணி முகர்ஜி பைகுல்லா பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
திடீர் நெஞ்சுவலி
இந்நிலையில் இந்திராணி முகர்ஜிக்கு நேற்றிரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவர் மும்பை ஜெஜெ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
|
ஐஎன்எக்ஸ் மீடியா
அவசர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்திராணி முகர்ஜி ஐஎன்எக்ஸ் மீடியாவின் முன்னாள் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.