மைனஸ் 20 டிகிரி.. 17 ஆயிரம் அடி உயரம்.. லடாக்கில் தேசியக் கொடி ஏந்திய இந்தோ திபெத் வீரர்கள்
லடாக்: காஷ்மீரின் லடாக் யூனியன் பிரதேசத்தில் 17 ஆயிரம் அடி உயரத்தில் தேசியக் கொடியுடன் இந்தோ- திபெத் எல்லை போலீஸார் குடியரசு தினத்தை கொண்டாடினர்.
நாடு முழுவதும் இன்று 71-ஆவது குடியரசு தினவிழா கொண்டாடப்படுகிறது. டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மூவர்ணக் கொடியை ஏற்றினார். அந்தந்த மாநிலங்களில் ஆளுநர்கள் கொடியை ஏற்றினர்.
இந்த நிலையில் ஜம்மு- காஷ்மீரின் லடாக் பகுதியில் 17 ஆயிரம் அடி உயரத்தில் மைனஸ் 20 டிகிரி செல்சியல் வெப்பநிலை நிலவி வருகிறது. அதிக குளிரையும் பொருட்படுத்தாத தேசியக் கொடியுடன் இந்தோ- திபெத் எல்லை போலீஸார் குடியரசு தினத்தை கொண்டாடினர்.
குடியரசு தின விழா: அஸ்ஸாமில் ஒரு மணிநேரத்தில் அடுத்தடுத்து 5 குண்டுவெடிப்புகளால் பதற்றம்
பனி படர்ந்த மலையில் அவர்கள் மூவர்ணக் கொடியை ஏந்தியபடி வரிசையாக நடந்து சென்று குடியரசு தினவிழாவை கொண்டாடினர். பின்னர் அனைவரும் ஒரு மித்த குரலில் பாரத் மாதா கி ஜே என்றும் வந்தே மாதரம் என்றும் முழங்கினர்.
#WATCH Indo-Tibetan Border Police (ITBP) personnel with the national flag celebrating Republic Day at 17000 feet in snow today. The temperature in Ladakh at present is minus 20 degrees Celsius. 'Himveers' chanting 'Bharat Mata Ki Jai' and 'Vande Mataram'. pic.twitter.com/ANCe8txnFI
— ANI (@ANI) January 26, 2020