கொடூரன்... கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்ட மனைவியின் அந்தரங்க உறுப்பில் பைக் கைப்பிடி செருகிய கணவன்
மனைவி உடனான சண்டையில் அந்தரங்க உறுப்பில் பைக் கைப்பிடியை சொருகி வைத்து கொடுமை செய்துள்ளார் ஒரு கொடூர கணவன். மத்திய பிரதேச மாநிலத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், மனைவியின் அந்தரங்க உறுப்புக்குள் பைக்கின் கைப்பிடி கவரை எடுத்து செருங்கிய கொடூர மனம் படைத்த கணவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கணவன் மனைவி சண்டையில் சில சமயம் மண்டை உடையும். சில நேரங்களில் கொலையில் கூட முடியும். ஆனால் மனைவியுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக இந்த விபரீத செயலை செய்துள்ளார் அந்த மிருக மனம் படைத்த அந்த கணவர். இந்த சம்பவம் நடந்து 2 வருடங்களாகிறது. இப்போது வெளிச்சத்திற்கு வரக்காரணம் அந்த கைப்பிடி தனது வேலையை காட்டத் தொடங்கியதுதான்.
சமீபத்தில் அந்தப் பெண்ணுக்கு வயிற்றில் மிகுந்த வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் ஸ்கேன் செய்து பார்த்தபோதுதான் உள்ளே பைக் கைப்பிடி இருந்தது தெரிய வந்து அதிர்ந்தனர்.
இந்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் நான்கு பேர் கொண்ட டாக்டர்கள் குழு கடுமையாக போராடி ஆபரேஷன் செய்து அந்த கைப்பிடியை எடுத்துள்ளது. இதையடுத்து அந்தப் பெண்ணிடம் கேட்டபோது நடந்ததை அவர் கண்ணீருடன் கூறியுள்ளார்.
சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாம். இதுதொடர்பாக கணவன், மனைவி இடையே மோதல் வெடித்துள்ளது. அந்த சண்டையின்போதுதான் இப்படி செய்து விட்டார் அந்த கணவர்.
மொட்டை மாடியில் நின்றிருந்த அதிகாரி மகள்.. பேன்ட்டைத் திறந்து ஆபாச சைகை செய்த போலீஸ்காரர்!
கர்ப்பப் பையில் அந்த கைப்பிடி போய் மாட்டி அங்கேயே இருந்துள்ளது. இதனால் அப்பெண்ணுக்கு தொற்று ஏற்பட்டு உடலின் பல பகுதிகளையும் பாதித்துள்ளது. கர்ப்பப் பை, சிறுநீரகப் பை மற்றும் சிறு குடல் வரை அந்த கைப்பிடியானது பயணித்துள்ளது என்று டாக்டர்கள் கூறினார்கள்.
அந்த மிருக மனம் படைத்த நபரை போலீஸார் கைது செய்து சிறைக்குள் தள்ளியுள்ளனர். மனைவி கூட சண்டை போட்டா, அதுக்காக இப்படியாடா பண்ணுவீங்க படு பாவிகளா!