For Daily Alerts
Just In
முல்லை பெரியாறு அணைக்கு நீர் வரத்து கிடு கிடு உயர்வு
திருவனந்தபுரம்: முல்லை பெரியாறு அணைக்கு நீர் வரத்து கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
கேரளத்தில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. இதனால் கடவுளின் தாய் வீடான கேரளமே வெள்ள நீரில் தத்தளித்து வருகிறது.
இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இடுக்கி, வயநாடு உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் முல்லை பெரியாறு அணைக்கு வரும் நீரின் வரத்து உயர்ந்துள்ளது.
23,000 கனஅடியாக இருந்த நீர் வரத்து கிடுகிடுவென உயர்ந்தது. தற்போது அணையிலிருந்து 2300 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. கேரளாவில் 14 மாவட்டங்களில் 11 மாவட்டங்களில் இந்த வெள்ளம் சூழ்ந்துள்ளது.
சென்னை 2015 வெள்ளத்தை விட 5 மடங்கு பெரிய வெள்ளமாகும். மொத்தமாக ஒரே நேரத்தில் 26 அணைகளும் நிரம்பிவிட்டதாக மாநில அரசு கூறுகிறது.
Comments
English summary
Inflow to Mullai Periyar Dam increases as heavy rain lashes in Kerala.