காதலியை வீட்டிற்கு அழைத்து வந்ததால் அவமானப்படுத்திய பெற்றோர்.. ரயில் முன் விழுந்து இளைஞர் தற்கொலை
Recommended Video
திருவனந்தபுரம்: கேரளாவில், தனது காதலியை வீட்டிற்கு அழைத்து வந்ததால் அவமானப்படுத்தப்பட்ட இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.
கேகே ஸ்ரீஜித், 28 வயது நிரம்பிய இவர் தன்னுடைய காதலியை வீட்டிற்கு கொண்டு வந்ததால் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் சேல்ஸ்மேனாக வேலை செய்து வருகிறார்.
கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொத்ததாலா என்ற பகுதியில் வசித்து வருகிறார். அவரது தங்கை மற்றும் உறவினர்களுடன் வசித்து வருகிறார்.
திருமணம்
நீண்ட நாட்களாக அவரும் அதே பெண்ணும் காதலித்து வந்து இருக்கிறார்கள். இது அந்த ஊரில் இருந்த நபர்களுக்கும் தெரிந்திருந்துள்ளது. ஆனால் அவரது இந்த காதல், அந்த நபரின் தாய் மாமனுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. காதல் விஷயம் தெரிந்ததில் இருந்து அவர் பிரச்சனை செய்து இருக்கிறார்.
வந்துள்ளார்
இவர் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தன்னுடைய காதலியை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். வீட்டில் ஏற்கனவே திருமணம் குறித்து சொல்லி அனுமதி வாங்கியுள்ளார். ஆனால் அவர் வீட்டிற்கு வந்தது அவரின் தாய் மாமனுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அவமானம் தாங்கவில்லை
இதனால் அவரது தாய் மாமன் கோபாலகிருஷ்ணன், வீட்டிற்கு வெளியே சென்று கத்தியுள்ளார். அதேபோல், அவரது நண்பர்களையே அழைத்து வந்து எல்லோருக்கும் முன் அவமானப்படுத்தி இருக்கிறார். அந்த பெண்ணை குறித்தும், அவர்கள் உறவு குறித்தும் தவறாக பேசியுள்ளனர்.
தற்கொலை செய்துகொண்டார்
இந்த நிலையில் அவர் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துள்ளார். ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து இருக்கிறார். அவரது உடல் தற்போது பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது.