சர்வதேச யோகா தினம்: டேராடூன் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பு
டேராடூன் வன ஆராய்ச்சி மையத்தில் சர்வதேச யோகா தின விழா கொண்டாட்டம் நடக்கிறது.
Recommended Video
டேராடூன்: டேராடூன் வன ஆராய்ச்சி மையத்தில் சர்வதேச யோகா தின விழா கொண்டாட்டம் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார்.
சர்வதேச யோகா தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவின் பல இடங்களில் இதற்காக விழா நடக்கிறது. மக்கள் தெருக்களில் நின்று யோகா செய்து வருகிறார்கள். தற்போது டேராடூன் வன ஆராய்ச்சி மையத்தில் சர்வதேச யோகா தின விழா கொண்டாட்டம் நடக்கிறது.
டேராடூன் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார். சர்வதேச யோகா தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
More visuals from Forest Research Institute in Dehradun, Uttarakhand where PM Narendra Modi is leading #InternationalYogaDay2018 celebrations. pic.twitter.com/Y0hiS0xUsN
— ANI (@ANI) June 21, 2018
அதில், உடல் ஆரோக்கியத்திற்கும், நல்வாழ்வுக்கும் யோகா பெரும் பங்கு வகிக்கிறது.உலகை இணைக்கும் சக்தியாக யோகா திகழ்கிறது. கங்கை நதி பாயும் இடத்தில் யோகா செய்தல் பெரும் பாக்கியம். யோகா பயிற்சி மேற்கொண்டு சூரியனை வரவேற்போம்.
PM Narendra Modi leads #InternationalYogaDay2018 celebrations at the Forest Research Institute in Dehradun, Uttarakhand. pic.twitter.com/AXxh5KHSSF
— ANI (@ANI) June 21, 2018
உலகிலேயே அதிகளவில் யோகா பயிற்சியை அளிக்கும் நாடு இந்தியா. யோகா பயிற்சியால் மன அமைதியை பெற முடியும். அவசரமாக பணிக்கு சென்றாலும் தினமும் யோகா பயிற்சி செய்ய வேண்டும். யோகா மூலம்
எதிர்காலத்தை கட்டமைக்க முடியும்.
யோகா பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உடல், மூளை, ஆன்மாவை அமைதி படுத்தலாம் என்றார். இன்னும் பல மாநிலங்களில் இதே போல யோகா நாள் கொடாடப்பட்டு வருகிறது.