For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஷீனா கொலை வழக்கில் புதிய திருப்பம்: அந்தரங்க போட்டோக்கள் சிக்கின

By Siva
Google Oneindia Tamil News

மும்பை: ஷீனா போரா தனது தாய் இந்திராணி முகர்ஜிக்கு நன்கு பழக்கமான ஒருவருடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளது.

இந்திராணி முகர்ஜி தனது மகள் ஷீனா போராவை கடந்த 2012ம் ஆண்டு கொலை செய்து அவரது உடலை தீ வைத்து எரித்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இந்திராணி தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

ஷீனா

ஷீனா

ஷீனா கொலை செய்யப்பட்டபோது அவர் 4 மாத கர்ப்பமாக இருந்ததாக முன்பு கூறப்பட்டது. அந்த கர்ப்பத்திற்கு அவரது காதலர் ராகுல் அல்ல மாறாக இந்திராணிக்கு நெருக்கமான ஒருவர் தான் காரணம் என்று செய்திகள் வெளியாகின.

புகைப்படங்கள்

புகைப்படங்கள்

ஷீனா தனது தாய்க்கு நெருக்கமான ஒருவருடன் மிகவும் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அவர் வாட்ஸ்ஆப் மூலம் அந்த நபருக்கு அனுப்பி வைத்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது போலீசாருக்கு கிடைத்துள்ளது.

தாய்லாந்து

தாய்லாந்து

ஷீனாவும் அந்த நபரும் இந்தியாவில் உள்ள கடற்கரை ரிசார்ட்டில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தான் தற்போது போலீசாருக்கு கிடைத்துள்ளது. ஷீனா தாய்லாந்து சென்று அந்த நபரை சந்தித்து அவருடன் மிகவும் நெருங்கிப் பழகியதாகவும் அதன் காரணமாக கர்ப்பமானதாகவும் முன்பு கூறப்பட்டது.

ஆன்லைன்

ஆன்லைன்

ஷீனாவும், அந்த நபரும் ஆன்லைன் மூலம் சாட் செய்துள்ளனர். நேரில் சந்தித்து நெருக்கத்தை வளர்த்துக் கொண்டது பற்றி அறிந்த இந்திராணி அவர்களை கண்டித்துள்ளாராம். ஷீனாவின் சகோதரர் மிகைலும் போலீசாரிடம் சில புகைப்படங்களை அளித்துள்ளார். இதன் மூலம் இந்த வழக்கில் தெளிவு பிறக்கும் என்று நம்பப்படுகிறது.

English summary
Mumbai police have got some intimate photographs of murdered Sheena Bora with a man who was close to her mother Indrani.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X