இந்தியாவின் இரும்பு மனிதர் அமித்ஷா.... முகேஷ் அம்பானியின் அடேங்கப்பா அரசியல் பேச்சு
காந்திநகர்: இந்தியாவின் தற்போதைய இரும்பு மனிதர் அமித்ஷா என்று ரிலையன்ஸ் குழுமங்களின் தலைவர் முகேஷ் அம்பானி வெகுவாக புகழ்ந்து பேசியிருக்கிறார்.
பண்டிட் தீனதயாள் பெட்ரோலியம் பல்கலைக் கழகத்தின் 7-வது ஆண்டு பட்டமளிப்பு விழா காந்திநகரில் நேற்று நடைபெற்றது. இதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, ரிலையன்ஸ் குழுமங்களின் தலைவர் முகேஷ் அம்பானி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் முகேஷ் அம்பானி பேசியதாவது:
உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு கர்ம யோகி; அவர் எங்கள் காலத்து இந்தியாவின் இரும்பு மனிதர். உங்களது உற்சாகம் எங்களுக்கு எப்போதும் புத்துணர்வை தருகிறது.
சுஷ்மா, ஜேட்லி மரணம் தொடர்பாக சர்ச்சை பேச்சு.. பிரக்யாசிங் தாக்கூருக்கு பாஜக வாய்ப்பூட்டு!
குஜராத் மற்றும் ஒட்டுமொத்த இந்தியாவும் உங்களைப் போன்ற தலைவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு நாங்கள் எங்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறோம்.
இவ்வாறு முகேஷ் அம்பானி பேசினார்.