ரயில் டிக்கெட் முன்பதிவு.. புதிய ஆப் அறிமுகம் செய்தது ஐ.ஆர்.சி.டி.சி. !
ரயில் டிக்கெட்டுகளை வேகமாக முன்பதிவு செய்ய புதிய செயலி ஒன்றை ஐஆர்சிடிசி அறிமுகம் செய்துள்ளது.
டெல்லி: ரயில் டிக்கெட்டுகளை வேகமாக முன்பதிவு செய்ய புதிய செயலியை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று தொடங்கி வைத்தார்.
ரயில் டிக்கெட்டுகளை எளிதாகவும் வேகமாகவும் முன்பதிவு செய்ய 'ஐஆர்சிடிசி ரயில் கனெக்ட்' என்ற பெயரில் புதிய செயலி ஒன்றை இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) இன்று அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று தொடங்கி வைத்தார்.
இந்த செயலியைப் பயன்படுத்தி தட்கல் டிக்கெட், பெண்களுக்கான இட ஒதுக்கீடு டிக்கெட், பிரீமியம் தட்கல் டிக்கெட், நடப்பு முன்பதிவு ஆகிய வழிகளில் டிக்கெட்டுகளை எளிதாகவும் வேகமாகவும் முன்பதிவு செய்துகொள்ள முடியும்.
மேலும், இந்த செயலியைப் பயன்படுத்தி டிக்கெட்டுகள் இருப்பு நிலையை அறிந்து கொள்ளலாம். விரைவான முன்பதிவுக்கு மட்டுமின்றி டிக்கெட்டுகளை ரத்து செய்யவும் இந்த செயலியை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்கள் கொண்ட மொபைல்களில் இந்த செயலியை பயன்படுத்தலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.