சசிகலா பெங்களூரில் இருந்து புழல் சிறைக்கு மாற்றமா?: சிறைத்துறை டிஜி விளக்கம்
பெங்களூரு: சசிகலா தன்னை சென்னையில் உள்ள புழல் சிறைக்கு மாற்றுமாறு எந்த கோரிக்கையும் விடுக்கவில்லை என சிறைத்துறை டிஜி தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அந்த 3 பேரும் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பெங்களூரு சிறையில் சசிகலாவுக்காக விதிமுறைகள் மீறப்படுவதாகவும் அதனால் அவரை திகார் சிறைக்கு மாற்ற வேண்டும் என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து சிறைத்துறை டிஜி கூறியிருப்பதாவது,
சசிகலா தன்னை சென்னையில் உள்ள புழல் சிறைக்கு மாற்றுமாறு எந்த கோரிக்கையும் விடுக்கவில்லை. சிறையில் அவர் கேட்ட வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்படவில்லை என்றார்.