இஷ்ரத் ஜகான் போலி என்கவுண்ட்டர் வழக்கு: குஜராத் அதிகாரிகள் பிபி பாண்டே, வன்ஜராவுக்கு ஜாமீன்!
அகமதாபாத்: இஷ்ரத் ஜகான் போலி என்கவுண்ட்டர் வழக்கில் குஜராத் மாநில முன்னாள் ஏ.டி.ஜி.பி. பி.பி. பாண்டே, மற்றொரு காவல்துறை அதிகாரி வன்ஜரா ஆகியோருக்கு சி.பி.ஐ. நீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளது.
2004ஆம் ஆண்டு குஜராத்தில் இஷ்ரத் ஜகான் உள்ளிட்ட 5 பேர் என்கவுண்ட்டர் என்ற பெயரில் போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த போலி என்கவுண்ட்டர் வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.
குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் 8 காவல்துறை அதிகாரிகள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
குஜராத் ஐ.பி.எஸ். அதிகாரி ஜி.எல். சிங்கால் உட்பட 5 காவல்துறை அதிகாரிகளுக்கு ஏற்கனவே ஜாமீன் வழங்கப்பட்டுவிட்டது.
இந்நிலையில் காவல்துறை அதிகாரிகள் பி.பி.பாண்டே, வன்ஜரா ஆகியோர் தாக்கல் செய்த மனுவை இன்று விசாரித்த சி.பி.ஐ. நீதிமன்றம் இருவருக்கும் ஜாமீன் அளித்து உத்தரவிட்டது.
தற்போது ஜாமீன் பெற்றுள்ள வன்ஜரா, சபர்மதி சிறையில் இருந்த போது சிறைக்குள்ளேயே கோயில் கட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.