For Daily Alerts
Just In
கொல்கத்தாவில் பாகிஸ்தான் உளவாளி கைது! தீவிரவாத செயலுக்காக வந்தாரா?
கொல்கத்தா: பாகிஸ்தான் உளவாளி என்று சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொல்கத்தாவில், சிறப்பு அதிரடி படை நடத்திய தேடுதல் வேட்டையின்போது, பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யை சேர்ந்த ஜபார் கான் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இவர், கொல்கத்தாவில் தங்கியிருந்து தீவிரவாத செயல்களை ஊக்குவிக்கும் நோக்கில் அங்கு வந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
அடுத்த கட்ட விசாரணைகளுக்கு பிறகு, உளவாளியின் நோக்கம் என்ன என்பது பற்றி தெளிவான தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
English summary
Special Task Force (STF) arrests suspected ISI agent Zafar Khan in Kolkata.
Story first published: Monday, November 16, 2015, 17:42 [IST]