உடலுறவின்போது வெறித்தனமாக பாய்ந்த காதலன்.. மூச்சு திணறி இறந்த காதலி.. மும்பை ஹோட்டலில் ஷாக்
Recommended Video
மும்பை: காதலியுடன் வெறித்தனமாக பாலியல் உறவில் ஈடுபட்டு அவரின் மரணத்திற்கு காரணமாக இருந்ததாக இஸ்ரேலை சேர்ந்த இளைஞர் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
23 வயதாகும் இஸ்ரேலை சேர்ந்த இளைஞர் ஒரிரான் யாக்கோவ். இவர் தனது 20 வயது காதலியுடன் சுற்றுலா விசா மூலமாக இந்தியா வந்திருந்தார்.
2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் மும்பையில் உள்ள கொலாபா பகுதியில் ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தனர். அப்போது காதலர்கள் இருவரும் உடலுறவில் ஈடுபட்டு உள்ளனர்.
அப்போது ஒரிரான் யாக்கோவ் வெறித்தனமாக நடந்து கொண்டுள்ளார். இதையடுத்து பேச்சு மூச்சு இல்லாமல் அவரின் காதலி மயங்கி சாய்ந்தார்.
இதுகுறித்து ஹோட்டல் ஊழியர்களுக்கு ஒரிரான் யாக்கோவ் தகவல் தெரிவித்தார். அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்தப் பெண்ணை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரியவந்தது.
இது ஒரு எதிர்பாராத சாவு என்ற வகையில் மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். ஆனால் இப்பொழுது தடயவியல் சோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் மூச்சுத்திணறல் காரணமாக அந்தப் பெண் பலியாகி இருப்பது தெரிய வந்துள்ளது.
உடலுறவின் போது கழுத்து பகுதியில் கொடுக்கப்பட்ட, அதிக அழுத்தம் காரணமாக மூச்சு திணறி அந்தப் பெண் உயிரிழந்துள்ளது இதன் மூலம் உறுதியாகியுள்ளது. எனவே, ஒரிரான் யாக்கோவ் மீது தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் இப்பொழுது இஸ்ரேலில் உள்ளார்.