நான் குமாரியில்லை... ஸ்ரீமதியாக்கும்...: அமைச்சர் பி.கே. ஜெயலட்சுமி
திருவனந்தபுரம்: நான் இன்னமும் குமாரியில்லை... எனக்கு திருமணமாகிவிட்டது. எனது பெயருக்கு முன்னால் இனிமேல் ஸ்ரீமதி என்றே போடுங்கள் என்று கேரளாவின் ஒரே பெண் அமைச்சரான பி.கே.ஜெயலட்சுமி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
கேரள அரசில் பழங்குடி மற்றும் இளைஞர் விவகாரங்கள் துறை பெண் அமைச்சரான பி.கே.ஜெயலட்சுமி தமது உறவு முறையை சேர்ந்த சி.ஏ.அனில் குமார் என்பவரை கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டார்.
மனந்தவாடி ரிசர்வ் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவாக ஜெயலட்சுமி உள்ளார்.கேரள மாநிலத்தின் ஒரே பெண் அமைச்சரான அவர் திருமணம் செய்து கொண்ட பின்னரும், இன்னமும் அவரது பெயருக்கு முன்னாள் குமாரி என்றே போடப்பட்டு வந்தது.
இதனையடுத்து அவர் அதிகாரப்பூர்வமாக ஒரு சுற்றறிக்கை ஒன்றினை தனது துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அனுப்பிய அவர், தனது பெயருக்கு முன்னார் இனி குமாரி என்று போடவேண்டாம், ஸ்ரீமதி என்று போடுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.