நிதிஷ் கூட்டணி்யின் வெற்றி ஜனநாயகத்தின் வெற்றி... சொல்வது பாஜகவின் சத்ருகன் சின்ஹா
மும்பை: பீகார் சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதாதள கூட்டணிக்கு கிடைத்துள்ள வெற்றி ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்று பாஜக தலைவர் சத்ருகன் சின்ஹா தெரிவித்துள்ளார்.
பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. இதில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதள கூட்டணி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை விட முன்னிலையில் உள்ளது.
பீகாரில் ஐக்கிய ஜனதாதள கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. பீகார் மக்கள் புத்திசாலிகள் என்று மோடி புகழ்ந்தும் பலனிக்கவில்லை.
It is the victory of democracy and the people of Bihar. I salute them.
— Shatrughan Sinha (@ShatruganSinha) November 8, 2015
இந்நிலையில் இது குறித்து நடிகரும், பாஜக தலைவருமான சத்ருகன் சின்ஹா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
இது ஜனநாயகத்திற்கும், பீகார் மக்களுக்கும் கிடைத்த வெற்றி. அவர்களை வணங்குகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பாஜகவில் சத்ருகன் சின்ஹாவுக்கு எதிராக குரல் எழுந்து கொண்டிருக்கையில் அவர் இவ்வாறு ட்வீட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.