For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அசிங்கமாக சமிக்ஞை காட்டுகிறார் .... சாமியார் மீது இத்தாலி பெண் புகார்

Google Oneindia Tamil News

மதுரா, உ.பி: உ.பி. மாநிலம் மதுராவில் கடந்த 40 வருடங்களாக வசித்துவரும் இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண், சாமியார் ஒருவர் மீது பாலியல் தொல்லை புகார் கொடுத்துள்ளார்.

இந்தப் பெண் இஸ்க்கான் அமைப்பில் இணைந்து செயல்பட்டு வருகிறார். தான் வசித்து வரும் வீட்டுக்குப் பக்கத்தில் வசித்து வரும் சாமியார் தனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொ டுத்து வருவதாகவும், தன் முகம் மீது ஆசிட் வீசி விடுவதாக மிரட்டுவதாகவும் அவர் சிறப்பு எஸ்.பி. மஞ்சில் சைனியிடம் புகார் கொடுத்துள்ளார்.

சைதன்ய விஹார் பகுதியில் இந்தப் பெண் வசித்து வருகிறார். தன்னிடம் அடிக்கடி ஆபாசமான முறையில் சமிக்ஞை செய்கிறார் சாமியார். இதுகுறித்து தான் போலீஸில் புகார் கூறப் போவதாக கூறியபோது, தன் முகத்தில் ஆசிட் வீசி விடுவதாக மிரட்டினார் என்று அந்தப் பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்தப் புகாரை ஏற்று தற்போது போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. புகார் உண்மையானதாக இருந்தால் சாமியார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

English summary
An Italian woman, who is an ISKCON follower and had been living here for the past 40 years, has accused a sadhu in her neighbourhood of harassing her and threatening to throw acid on her face, police said on Wednesday. In a complaint filed with SSP Manjil Saini, the woman has alleged that the sadhu living in her locality Chaitanya Vihar used to make obscene gestures towards her.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X