இவாங்கா டிரம்ப் இந்தியா வந்ததே ஆதார் கார்ட் வாங்கதானாம்.. என்ன சொல்கிறது ஆதார் அமைப்பு?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப் இந்தியா வந்தது ஆதார் கார்ட் வாங்குவதற்காக என்று டிவிட்டரில் கலாய்த்து வருகின்றனர்.
ஹைதராபாத்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப் சில நாட்களுக்கு முன்பு இந்தியா வந்தார். இவாங்கா டிரம்ப், டொனால்ட் டிரம்பிற்கு முதன்மை ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறார்.
இவர் இந்திய பிரதமர் மோடியை சந்தித்து உரையாற்றினார். ஹைதராபாத்தில் நடக்கும் சர்வதேச தொழில்முனைவோர் மாநாட்டில் கலந்து கொள்ள இவாங்கா டிரம்ப் இந்தியா வந்திருந்தார்.
இந்த நிலையில் அவர் இந்தியா வந்தது ஆதார் கார்ட் வாங்குவதற்காக என்று டிவிட்டரில் கலாய்த்து வருகின்றனர். இதற்கு ஆதார் அமைப்பும் சீரியஸாக பதில் அளித்து இருக்கிறது.
இவாங்கா இந்தியா வருகை
ஹைதராபாத்தில் சில நாட்களுக்கு முன்பு சர்வதேச தொழில்முனைவோர் மாநாடு நடந்தது. இந்த நிகழ்வில் கலந்து கொள்ள இவாங்கா டிரம்ப் இந்தியா வந்திருந்தார். ஹைதராபாத்தில் அவருக்கு மிகவும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் அவர் மோடியுடன் இணைந்து மிகப்பெரிய மதிய உணவு விருந்தில் கலந்து கொண்டார்.
|
ஆதார் வாங்கவதற்காக
இந்த நிலையில் அவர் இந்தியா வந்தது ஆதார் கார்ட் வாங்க தான் என ஒருவர் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் இவாங்கா ஆதார் கார்ட் குறித்து விசாரிப்பது போல டப்பிங் செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நீங்கள் ஆதார் வாங்காமல் அமெரிக்க செல்ல மாட்டீர்கள் என்று அதிகாரிகள் சொல்வது போலவும் எடிட் செய்யப்பட்டு இருக்கிறது.
|
ஆதார் லின்க் பண்ண
அதேபோல் அவருக்கு இவர் மிகவும் காமெடியாக பதில் அளித்துள்ளார். அதில் "அவர் தன்னுடைய மொபைல் நம்பரையும்,வங்கி கணக்கையும் ஆதார் நம்பருடன் இணைக்கவில்லை. ஆகவே கண்டிப்பாக மீண்டும் இந்தியா வருவார்'' என்று கூறியுள்ளார்.
|
ஆதார் அமைப்பின் பதில்
தற்போது இந்த கேள்விக்கு ஆதார் அமைப்பு பதில் அளித்து இருக்கிறது. அதில் ''அவரால் ஆதார் கார்ட் விண்ணப்பிக்க முடியவில்லை. ஏனென்றால் அவர் இந்தியாவை சேர்ந்தவர் இல்லை'' என்று சீரியசாக பதில் அளித்து இருக்கிறது.