For Daily Alerts
Just In
காஷ்மீர் எல்லையில் பாக். தாக்குதலில் 2 இந்திய வீரர்கள் மரணம்!
ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் மேலும் ஒரு இந்திய ராணுவ வீரர் உயிரிழந்தார்.
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 2 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக இத்தாக்குதல் நீடித்து வருகிறது.
பாகிஸ்தான் தாக்குதலில் பொதுமக்களும் படுகாயமடைந்தனர். இன்று காலையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் எல்லை பாதுகாப்புப் படை வீரர் படுகாயமடைந்தார்.
மாலையில் பாகிஸ்தான் நடத்திய மற்றொரு தாக்குதலில் மேலும் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்துள்ளார். இதனால் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.
Comments
English summary
Two BSF Jawans succumbed to his injuries on Thursday as Pakistan violated ceasefire in Jammu and Kashmir.
Story first published: Thursday, October 27, 2016, 18:14 [IST]