For Daily Alerts
Just In
தெலுங்கானா விவகாரம்: பிரணாப்பை சந்தித்தார் ஜெகன்மோகன்
டெல்லி: தெலுங்கானாவுக்கு எதிராக போராடி வரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்து மனு கொடுத்தார்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை இன்று சந்தித்த ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திராவை பிரிக்கக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தினார்.
பிரணாப் முகர்ஜியை இன்று ராஷ்ட்ரபதி பவனில் தமது கட்சி நிர்வாகிகளுடன் சந்தித்து இக் கோரிக்கையை வலியுறுத்தி 5 பக்க மனுவை அளித்தார்.
ஏற்கெனவே டெல்லியில் பாரதிய ஜனதா மற்றும் இடதுசாரி தலைவர்களை ஜெகன் சந்தித்துப் பேசியிருக்கிறார். அத்துடன் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜியையும் ஜெகன் மோகன்ர் ரெட்டி சந்தித்துப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
YSR Congress party chief Y S Jaganmohan Reddy on Saturday called on President Pranab Mukherjee and urged him to keep Andhra Pradesh united.