ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அமோகம்.. ஆந்திர முதல்வராகிறார் ஜெகன்மோகன் ரெட்டி.. 30-இல் பதவியேற்பு
Recommended Video
அமராவதி: 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆந்திரத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சட்டசபை தேர்தலில் அமோகமாக வாக்குகளை பெற்று முன்னிலை வருவதால் அதன் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி வரும் 30-ஆம் தேதி பதவியேற்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆந்திர சட்டசபையானது 176 தொகுதிகளை கொண்டது. இங்கு கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி 103 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது.
ஆனால் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியோ 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து சில மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தலும் நடைபெற்றது. அதில் ஒன்று ஆந்திரம்.
ஆட்சி
இந்த நிலையில் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பின்படி ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தனி பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
கணிப்பு
எனவே முதல் முறையாக ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராவார் என எதிர்பார்க்கப்பட்டது. சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்ற கணிப்பால் தொண்டர்களும் மிகவும் உற்சாகமாக உள்ளனர்.
வெற்றி யாருக்கு
இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 144 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. அது போல் தெலுங்கு தேசம் கட்சிக்கு 29 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது. இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி தோல்வியை சந்தித்ததால் முதல்வர் சந்திரபாபு நாயுடு ராஜினாமா செய்கிறார். இதையடுத்து வரும் 30-ஆம் தேதி ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சர் ரோஜா?
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு பல்வேறு சோதனைகளில் உருதுணையாக இருந்தவர் நடிகை ரோஜா. இவர் நகரி தொகுதியில் போட்டியிட்டுள்ளார். மாநிலத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி அமையவுள்ளதால் ரோஜாவுக்கு மாநில அமைச்சரவையில் இடம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.