For Daily Alerts
Just In
காங். ஆட்சிகாலத்தில்தான் ஊழல், மோசடி எல்லாமே... சிதம்பரத்துக்கு ஜேட்லி பதிலடி
ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசு மீதான ப.சிதம்பரம் குற்றச்சாட்டை அருண்ஜேட்லி நிராகரித்துள்ளார்.
டெல்லி: ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததில் ஊழல் நடந்திருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறிய குற்றச்சாட்டை நிதி அமைச்சர் அருண்ஜேட்லி நிராகரித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சியில்தான் ஊழல்கள் நடைபெற்றன எனவும் ஜேட்லி சாடியுள்ளார்.
இது தொடர்பாக ஜேட்லி கூறியுள்ளதாவது:
ஏடிஎம்களில் 3 வாரங்களில் போதுமான ரூபாய் நோட்டுகள் நிரப்பப்படும். ரொக்கமில்லா பண பரிவர்த்தனையால் வரி ஏய்ப்போர் நிச்சயம் பிடிபடுவர். பண மதிப்பிழப்பு விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகளுடன் விவாதிக்க அரசு எப்போதும் தயாராகவே இருக்கிறது.
ஊழல், மோசடி போன்றவை காங்கிரஸ் ஆட்சியில்தான் அதிகமாக நிகழ்ந்ததன. அதுதான் அந்த கட்சியின் சாதனையும் கூட...
கடந்த 10 ஆண்டுகளில் ஊழல் மற்றும் கருப்பு பணத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சி என்ன நடவடிக்கை எடுத்தது?
இவ்வாறு அருண்ஜேட்லி கேள்வி எழுப்பினார்.
Comments
corruption scam jaitley currency ban congress chidambaram ஊழல் மோசடி ஜேட்லி ரூபாய் நோட்டு காங்கிரஸ் சிதம்பரம்
English summary
Finance Minister Arun Jaitley said the Congress party is uncomfortable with the anti-corruption campaign launched by the NDA government.