For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இவர்களை இப்படித்தான் சுட்டுத்தள்ள வேண்டும்.. ஜாமியா துப்பாக்கி சூடு பற்றி பாஜக எம்எல்ஏ விஷமம்!

டெல்லியில் போராடி நாட்டை பிரிக்கும் மக்களை இப்படித்தான் சுட்டு தள்ள வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ சங்கீத் சோம் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    இதோ உங்கள் சுதந்திரம்.. மாணவர்களை சுட்ட ராம் பகத் கோபால்

    டெல்லி: டெல்லியில் போராடி நாட்டை பிரிக்கும் மக்களை இப்படித்தான் சுட்டு தள்ள வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ சங்கீத் சோம் தெரிவித்துள்ளார். இவர் முசாபர்நகர் கலவரத்தில் இஸ்லாமியர்களின் வீடுகளை கொளுத்தியவர் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர் ஆவார்.

    டெல்லி ஜாமியா மிலியா துப்பாக்கி சூடு நாடு முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழகத்தில் சிஏஏவிற்கு எதிராக அமைதியாக கடந்த சில மாதங்களாக போராட்டம் நடந்தது.

    நேற்று இந்த போராட்டத்தில் ராம் பகத் கோபால் என்ற நபர் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார். பின்பக்கம் போலீஸ் இருப்பதும் தெரிந்தும் அவர் மக்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார். அவர் இப்படி துப்பாக்கியால் சுட்டதில் ஒரு கல்லூரி மாணவர் கையில் காயம் அடைந்தார்.

    சிஏஏ, என்ஆர்சிக்கு எதிராக போராட்டம்.. டெல்லியில் சோனியா தலைமையில் எதிர்க்கட்சிகள் போராட்டம் சிஏஏ, என்ஆர்சிக்கு எதிராக போராட்டம்.. டெல்லியில் சோனியா தலைமையில் எதிர்க்கட்சிகள் போராட்டம்

    இன்னொரு பாஜக

    இன்னொரு பாஜக

    இந்த நிலையில் இந்த துப்பாக்கி சூடு குறித்து இன்னொரு பாஜகவின் எம்எல்ஏவும் மிக கொடூரமான கருத்து ஒன்றை தெரிவித்து உள்ளார். பாஜக எம்எல்ஏ சங்கீத் சோம் தெரிவித்துள்ள கருத்தில், இந்தியாவில் நடக்கும் போராட்டங்கள்தான் இது போன்ற துப்பாக்கி சூடுகளுக்கு காரணம். இவர்கள்தான் மக்களை தூண்டி விடுகிறார்கள். இந்த துப்பாக்கி சூட்டை நான் கண்டிக்க மாட்டேன். இவர்களை இப்படித்தான் சுட்டு தள்ள வேண்டும்.

    டெல்லி நிலை

    டெல்லி நிலை

    டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் போராடும் பெண்களுக்கு வேலை எதுவும் இல்லை. அவர்கள் தங்கள் வீட்டில் எதுவும் சமைப்பது இல்லை. ஆனால் அவர்கள் தினமும் போராடுகிறார்கள். அவர்களுக்கு எங்கிருந்தோ பணம் வருகிறது. இல்லையென்றால் அவர்கள் இப்படி போராட்டம் செய்து இருக்க மாட்டார்கள். அவர்களை யாரோ பின்னிருந்து உதவுகிறார்கள். அவர்களை கண்டுபிடிக்க வேண்டும்.

    இந்தியா எப்படி

    இந்தியா எப்படி

    இந்தியாவை துண்டாடும் வகையில் இது போன்ற போராட்டங்கள் நடக்கிறது. இது போன்ற போராட்டங்களை ஏற்க கூடாது. ஷர்ஜீல் இமாம் போன்ற நபர்கள் இந்தியாவை உடைக்க வேண்டும் என்று திட்டமிட்டு வருகிறார்கள். அவர்களை எல்லாம் சுட்டுக் கொல்ல வேண்டும். நடு ரோட்டில் மக்கள் முன்னிலையில் அவர்களை போன்றவர்களை சுட்டு கொல்ல வேண்டும். அப்போதுதான் இது போன்ற போராட்டங்களை கட்டுப்படுத்த முடியும், என்று சங்கீத் சோம் குறிப்பிட்டுள்ளார்.

    பாஜக எம்எல்ஏ

    பாஜக எம்எல்ஏ

    முன்னதாக பாஜக மூத்த தலைவர்கள் அனுராக் தாக்கூர், கபில் மிஸ்ரா, பர்வேஷ் வெர்மா ஆகியோரும் இதேபோல் கருத்தை தெரிவித்து இருந்தனர். அதில் அனுராக் தாக்கூர் போராட்டக்காரர்களை சுட்டுக் கொலை செய்ய வேண்டும் என்றார். கபில் மிஸ்ராவும், இதேபோல் ஷகீன் பாக் மிக சிறிய பாகிஸ்தான். அங்கு போராடும் மக்களை அடித்து விரட்ட வேண்டும். அவர்கள் எல்லோரும் தீவிரவாதிகள் என்று குறிப்பிட்டார்.பாஜக எம்பி பர்வேஷ் வர்மா, ஷாகீன் பாக் பகுதியில் போராடும் எல்லோரும் குற்றவாளிகள். அங்கிருக்கும் மக்கள் எல்லோரும் தீவிரவாதிகள். அவர்கள் உங்கள் வீட்டிற்கு உள்ளே வருவார்கள். உங்கள் தங்கைகள், மனைவிகளை வன்புணர்வு செய்வார்கள்., என்றார் .

    English summary
    Jamia Firing: They Should be Shot Dead Publicly says BJP MLA Sangeet Som, makes news controversy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X