கடைகளில் எல்.இ.டி. பல்புகளை திருடிய கலால்துறை சப்-இன்ஸ்பெக்டர்... சிசிடிவி கேமராவில் சிக்கியவர் கைது
ஸ்ரீநகர் : ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள சில கடைகளில் எல்.இ.டி. பல்புகளை திருடிய கலால் துறை சப்-இன்ஸ்பெக்டர் சி.சி.டி.வி. கேமராவில் சிக்கியதையடுத்து, கைது செய்யப்பட்டுள்ளார்.
நானக் நகர் பகுதியில் உள்ள கடையின் வெளியே இருந்த எல்.இ.டி. பல்புகளை மாநில கலால் துறை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் திருடும் காட்சிகள் வீடியோவில் பதிவாகி சமூக வலைதளங்களில் பரவியது.
அந்த வீடியோவில் நானக் நகர் பகுதியில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தின் முன் தனது இருசக்கர வாகனத்தை கலால் துறை சப்-இன்ஸ்பெக்டர் விகாஸ் கஜூரியா நிறுத்துகிறார்.
பின்னர் அந்த நிறுவனத்தின் வெளிப்பகுதியில் இருந்த எல்.இ.டி. பல்புகளை சப்-இன்ஸ்பெக்டர் விகாஸ் கஜூரியா திருடுகிறார். இந்த காட்சிகள் அனைத்தும் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.
இதையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் விகாஸ் கஜூரியா கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கஜூரியா மனநலம் பாதிப்பிற்கு ஆளானவர் என்றும் கலால் துறையில் அவருக்கு எதிராக சில விசாரணைகளும் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.