காஷ்மீரில் பேருந்து நிலைய குண்டு வெடிப்பு.. ஒருவர் பலி.. 28 பேர் படுகாயம்.. குற்றவாளி கைது!
ஜம்மு காஷ்மீரில் பேருந்து நிலையத்தில் குண்டு வெடிப்பு ஏற்பட்டதில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
Recommended Video
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பேருந்து நிலையத்தில் குண்டு வெடிப்பு ஏற்பட்டதில் ஒருவர் பலியாகி உள்ளார். இதில் குண்டை வீசிவிட்டு சென்ற குற்றவாளி காஷ்மீர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.
ஜம்மு காஷ்மீரில் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள எஸ்ஆர்டிசி பேருந்து நிலையத்தில் இந்த சம்பவம் நடைபெற்று இருக்கிறது. அங்கு நின்று கொண்டு இருந்த பேருந்து ஒன்று வெடித்து சிதறி விபத்து ஏற்பட்டுள்ளது.
பேருந்திற்கு அடியில் இருந்த வெடிகுண்டு இப்படி வெடித்துள்ளது. கிரெனேட் வகை வெடிகுண்டு அது என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த குண்டு வெடிப்பு காரணமாக 28 பேர் காயம் அடைந்து இருக்கிறார்கள். குண்டு வெடிப்பில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் ஒருவர் பரிதாபமாக மதியம் பலியானார்.
இந்த குண்டு வெடிப்பிற்கு காரணமான நபர் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறார். சம்பவ இடத்தில் ராணுவமும், போலீசும் தீவிரமாக தேடுதல் வேட்டையிலும், விசாரணையிலும் ஈடுப்பட்டு வருகிறார்கள்.
சில நாட்கள் முன்புதான் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.
Jammu: Visuals from a hospital where people who were injured in a blast at a bus stand have been admitted for treatment. pic.twitter.com/Cu6FfIqDjI
— ANI (@ANI) March 7, 2019