For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஷ்மீரில் கடும் பனிச்சரிவு... பலியானோரின் எண்ணிக்கை 8 ஆக உயர்வு

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

குல்காம் மாவட்டத்தின் வடபகுதியில் அமைந்துள்ள ஜவஹர் சுரங்கத்தில் நேற்று முன்தினம் மாலை பனிச்சரிவு ஏற்பட்டது. அதில், அப்பகுதியில் இருந்த போலீஸ் சோதனை சாவடியும் சிக்கியது. இதில் போலீசார் உள்பட 20 பேர் சிக்கிக் கொண்டனர். 3 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 12 பேர் பனிச்சரிவில் சிக்கி புதைந்தனர். மற்றவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடக்கிறது.

jammu and kashmir Snow Fall: The number of victims has increased to 8

குறிப்பாக, குல்காம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 5 அடி வரை பனிகட்டிகள் குவிந்து கிடக்கின்றன.

இந்நிலையில், இன்று நடைபெற்ற மீட்புப் பணியின்போது காணாமல் போன ஒரு போலீசின் உடலை மீட்டனர். இதையடுத்து, ஜம்மு காஷ்மீரின் பனிச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

English summary
jammu and kashmir police said.The number of victims in Jammu and Kashmir has risen to 8
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X