For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தோட்டா தெறிக்க, தெறிக்க காஷ்மீரில் ராணுவம் பதிலடி... தீவிரவாதி சுட்டுக்கொலை

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே காலை முதல் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.

பாரமுல்லா மாவட்டம் சோப்பூர் பகுதியில் உள்ள வார்போரா என்ற இடத்தில் திவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

JammuAndKashmir: Encounter between terrorists and security forces underway in Baramulla district.

இதனையடுத்து அந்த பகுதியில் ரோந்து சென்ற பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் பதுங்கி இருந்து திடீர் தாக்குதல் நடத்தினர். இதனால், உஷாரான பாதுகாப்பு படையினர், அப்பகுதியை சுற்றிவளைத்தனர்.

தீவிரவாதிகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்ட நிலையில், அவனிடம் இருந்து வெடிப்பொருட்கள் மற்றும் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், என்கவுண்டர் நடந்து வரும் அப்பகுதியில் மொபைல் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, பத்காம் மாவட்டம் கோபாலபூரா பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். புல்வாமா மாவட்டத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து, ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.

English summary
JammuAndKashmir: Encounter underway between terrorists and security forces in Warpora area of Sopore in Baramulla district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X