For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வச்ச குறி தப்பாது… 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

சோபியான் மாவட்டத்தில் உள்ள இமாம் ஷாஹிப் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த பகுதியில் ரோந்து சென்ற பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் பதுங்கி இருந்து திடீர் தாக்குதல் நடத்தினர். இதனால், உஷாரான பாதுகாப்பு படையினர், அப்பகுதியை சுற்றிவளைத்தனர்.

JammuAndKashmir: Two terrorists killed In Shopian district

இதனைத்தொடர்ந்து, தீவிரவாதிகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. இதில் சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து வெடிப்பொருட்கள் மற்றும் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், என்கவுண்டர் நடந்து வரும் அப்பகுதியில் மொபைல் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து, பாதுகாப்புபடையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். நடக்க உள்ள நாடாளுமன்றத் தேர்தலை தீவிரவாதிகள் சீர்குலைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, நாட்டின் பாதுகாப்புக்கு தொடர்ந்து அச்சுறுத்தலை கொடுத்து வரும் தீவிரவாத இயக்கங்களுக்கு, இந்திய பாதுகாப்பு படையினர் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

English summary
JammuAndKashmir: Two terrorists killed in exchange of fire between terrorists and security forces in Imam Sahib area of Shopian district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X