காஷ்மீர்: சரணடைந்த தீவிரவாதிக்கு கருணை- ராணுவ வீரர்களின் காலை தொட்டு வணங்கிய தந்தை-நெகிழ்ச்சி வீடியோ
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் சரணடைந்த தீவிரவாதிக்கு கருணை காட்டிய நமது ராணுவ வீரர்களின் காலை தொட்டு அவரது தந்தை வணங்கிய நெகிழ்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
ஜம்மு காஷ்மீரின் பட்காம் பகுதியில் சதூரா என்ற இடத்தில் ராணுவத்தினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். தீவிரவாதிகள் ஏகே 47 ரக துப்பாக்கியுடன் பதுங்கி இருக்கும் ஒரு இடத்தை ராணுவ வீரர்கள் சுற்றி வளைத்தனர்.
பிரதமர் மோடிக்கு நான் ஹனுமான்... என் நெஞ்சை பிளந்து காட்டட்டுமா? சிராக் பாஸ்வான் பொளேர் பேச்சு
சரணடைய வேண்டுகோள்
அங்கே பதுங்கியிருந்தவர்களில் ஜஹாங்கீர் என்ற தீவிரவாதியும் இருப்பதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஜஹாங்கீர்! நீங்க சரணடையுங்க.. யாரும் எதுவும் செய்யமாட்டோம் என்ற அறிவிப்பு கொடுத்தபடியே ராணுவத்தினர் முன்னேறிச் சென்றனர்.
தீவிரவாதியிடன் கருணை
அப்போது வேறு யாரும் அங்க இருக்காங்களா? வேற ஆயுதங்கள் என ராணுவத்தினர் கேட்டுக் கொண்டே இருக்க தீவிரவாதி ஜஹாங்கீர் மறைவிடத்தில் இருந்து கைகளைத் தூக்கியபடியே வெளியே வந்தார். அவரை நெருங்கிய ராணுவத்தினர் கீழே உட்காருமாறு சொல்லிய உடனே தண்ணி கொடுங்க என அன்புடன் கூறினர்.
ராணுவ வீரர்களின் பாதம் தொட்ட தந்தை
இந்த நிகழ்ச்சிகளை அங்கே பார்த்துக் கொண்டிருந்த ஜஹாங்கீரின் தந்தை நன்றிப் பெருக்கில் ராணுவத்தினரின் கால்களில் விழுந்து கும்பிட்டார். அப்போது ராணுவத்தினர், உங்க மகன் இப்போது நல்ல செயலைத்தான் செய்திருக்கிறார். அவரது கடந்த காலதவறுகளை மன்னித்துவிடலாம். இனிமேல் தீவிரவாதிகளுடன் சேராமல் இருக்கட்டும் என அறிவுரை கூறினர்.
|
வைரல் வீடியோ
இந்த நடவடிக்கையின் போது அப்பகுதியில் செல்போன் சேவையை ராணுவம் நிறுத்தி வைத்தது. பின்னர் இந்த ஆபரேஷன் முடிவடைந்த நிலையில் செல்போன் சேவைகள் மீண்டும் இயங்கின. ராணுவத்தின் கருணைமிக்க இந்த செயல் வீடியோவாக வெளியிடப்பட்டது. இது சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்படுகிறது.