For Daily Alerts
Just In
ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு: வெள்ளி பொருட்களை ஒப்படைக்க கோரி அரசு வக்கீல் புதிய மனு
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அரசு வக்கீல் பவானிசிங் புதிய மனு ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:
ஜெயலலிதாவின் சட்ட ஆலோசகர் பாஸ்கரன் 1116 கிலோ வெள்ளி பொருட்களை எடுத்து சென்றார். அவற்றை கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும். வெள்ளி பொருட்களை கோர்ட்டில் ஒப்படைத்த பிறகு அதை மதிப்பீடு செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டது.
இதற்கு நாளைக்குள் பதில் அளிக்குமாறு ஜெயலலிதா தரப்பு வக்கீலுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Comments
English summary
Govt prosecutor has asked the Bangalore spl court to order Jayalalitha's lawyer to return back the silver articles which were recovered from her in the DA case.
Story first published: Monday, February 3, 2014, 13:55 [IST]