For Daily Alerts
Just In
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: அரசு வழக்கறிஞர் ஆப்சென்ட்- இறுதி வாதம் ஒத்திவைப்பு
பெங்களூர்: முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் இறுதி வாதம் வரும் 10ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் இறுதி வாதம் மார்ச் 7ம் தேதி அதாவது இன்று துவங்கும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அரசு வழக்கறிஞர் பவானி சிங் தனக்கு உடல் நலம் சரியில்லை என்று கூறி நீதிமன்றத்திற்கு வரவில்லை. வழக்கறிஞர் ஆஜராகாமல் போனதற்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் அவரை மருத்துவ சான்றிதழை சமர்பிக்குமாறு உத்தரவிட்டார்.
இதையடுத்து வழக்கின் இறுதி வாதம் வரும் 10ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
Comments
English summary
The final hearing of the assets case against CM Jayalalithaa is postponed to march 10 as the government lawyer failed to turned up.
Story first published: Friday, March 7, 2014, 15:06 [IST]