பெங்களூரு சிறையில் 'திக்பிரமை'யில் சசி அக்கா மகன் சுதாகரன்! மீள்வதற்காக ஆன்மீகத்தில் நாட்டம்!
பெங்களூரு சிறையில் திக்பிரமை பிடித்தவராக வலம் வருகிறார் சுதாகரன். இதற்காக ஆன்மீகம் மூலம் தெளிவு பெறவும் அவர் போராடுகிறாராம்.
பெங்களூரு: சசிகலாவுடன் சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் அவரது அக்கா மகன் சுதாகரன் திக்பிரமை பிடித்தது போல காட்சி தருகிறாராம். இதனால் சக கைதிகளின் அறிவுரைப்படி 'தெளிவு' பெற ஆன்மீக புத்தகங்களை படித்து வருகிறாராம்.
சசிகலாவின் அட்டகாசத்தில் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் அந்தஸ்தை பெற்றிருந்தார் சுதாகரன். இவரது திருமணத்தை நடத்தி வைக்கப் போய் ஜெயலலிதாவுக்கு எல்லாமும் இறங்குமுகம்.
இப்போது சசிகலா, சுதாகரன், இளவரசி என அனைவரும் சிறைவாசம் அனுபவிக்கவும் இந்த திருமணம்தான் காரணம். இப்போது பெங்களூரு சிறையில் 4 ஆண்டுகால சிறை தண்டனை அனுபவித்து வருகிறார் சுதாகரன்.
சசி, இளவரசி நடிப்புகள்
சசிகலா சிறையில் தம்மை ரொம்பவே பிசி போல 'சந்திப்புகள்' மூலம் காட்டிக் கொள்கிறார். இளவரசியோ தம்மை ஒரு நோயாளி போல நடித்துக் காட்டி அனுதாபத்தை பெற போராடுகிறார்.
திக்பிரமை சுதாகரன்
சுதாகரனைப் பொறுத்தவரையில் சிறைக்கு வந்த நாள் முதலே திக்பிரமை பிடித்தவராகவே இருந்திருக்கிறார். திடீரென இரவு நேரங்களில் மந்திரங்களை ஓதி சக கைதிகளை மிரட்டியும் இருக்கிறார்.
ஆன்மீகம்
சுதாகரனின் 'போக்கை' பார்த்த சக கைதி ஒருவர்தான் கொஞ்சம் 'தெளிவு' கிடைக்க ஆன்மீக புத்தகங்களை படிக்க அறிவுறுத்தியுள்ளார். தொடக்கத்தில் இதனை வேண்டா வெறுப்பாக ஏற்றுக் கொண்டாலும் இப்போது அவர் ரொம்பவே பிஸியாம்.
ஆன்மீக பிரமைதான் அடுத்து
ஆன்மீக புத்தகங்களை வாங்கித் தர வார்டன்களிடம் கெஞ்சுகிறாராம். இப்படியே சுதாகரன் போனால் 'ஆன்மீக' 'பிரமை' பிடித்தவராகிவிடுவார் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.