ஜெ.தான் அடுத்த பிரதமர்.. மதுரை ஆதீனம் ஆரூடம்
திருச்செந்தூர்: ஜெயலலிதா பிரதமராகும் வாய்ப்பை எட்டி உதைத்தாரே.. என்று இந்திய கம்யூனிஸ்ட் செயலர் தா. பாண்டியன் ஆதங்கப்பட்டால் அவரைவிட ஜெயலலிதாதான் பிரதமர் என்று அடித்து சொல்கிறர் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர்.
திருச்செந்தூர் தேரடி திடலில் தூத்துக்குடி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜெ.ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜியை ஆதரித்து மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் பேசியதாவது:
நானும் ஒரு வாக்காளர். நாட்டை காப்பதில் எனக்கும் கடமை உண்டு. தமிழகத்தை சேர்ந்தவர்கள் உயரிய பதவியான குடியரசு தலைவர் பதவியில் இருந்துள்ளனர்.
ஆனால், பெருந்தலைவர் காமராஜர், மூப்பனாருக்கு பிரதமராகும் வாய்ப்பு வந்தது. அவர்கள் அதை சரியாக பயன்படுத்தவில்லை.
தற்போது முதல்வர் ஜெயலலிதா பிரதமராகும் நேரம் வந்துள்ளது. அவர் துணிச்சலான ஆற்றல் மிக்க பெண்மணி. அவர் பிரதமரானால் இந்தியா அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைந்து, நிச்சயம் வல்லரசாகும்.
இவ்வாறு மதுரை ஆதீனம் பேசியுள்ளார்.