ஜெட் ஏர்வேஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்... 136 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
136 பயணிகளுடன் சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானம் ஹைதராபாத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ஹைதராபாத்: ஜெட் ஏர்வேஸ் விமானம் ஹைதராபாத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதில் விமானத்தில் இருந்த 136 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேறினர்.
கொல்கத்தாவில் இருந்து பெங்களூருக்கு ஜெட் ஏர்வேஸ் விமானம் இன்று புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்தபோது திடீரென கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானத்தை அவசரமாக தரையிறக்க ஹைதராபாத் விமான நிலையத்திற்கு விமானி தகவல் தெரிவித்தார்.
பின்னர் அந்த விமானம் ஹைதராபாத் விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு ஏதுவாக ஓடுதளம் தயார் நிலையில் வைக்கப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விமானத்தில் 136 பயணிகள் பயணம் செய்தனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தை சோதனை செய்தபோது டயர் பஞ்சர் ஆகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.