ஜார்க்கண்ட்: காங்-ஜேஎம்எம்-ஆர்ஜேடி ஆட்சியை கைப்பற்றும் - டைம்ஸ் நவ் எக்ஸிட் போல்
டெல்லி: ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும் என டைம்ஸ் நவ் டிவி சேனலின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இன்று இறுதி கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் பெரும்பாலானவை காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அரசு அமையும் என்றும் ஒருசில எக்ஸிட் போல் முடிவுகள், தொங்கு சட்டசபை அமையும் எனவும் கூறியுள்ளன.
ஜார்கண்டில் தொங்கு சட்டசபை.. காங்கிரஸ் கூட்டணிக்கு அதிக இடங்கள்- சி வோட்டர் அதிரடி எக்ஸிட் போல்
டைம்ஸ் நவி டிவி சேனல் வெளியிட்ட எக்ஸிட் போல் முடிவுகளில் காங்கிரஸ்- ஜே.எம்.எம் 39 இடங்களையும் ஆர்ஜேடி 5 தொகுதிகளையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாஜகவுக்கு 28 இடங்கள் கிடைக்கும் எனவும் டைம்ஸ் நவ் எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன. ஜேவிஎம் கட்சிக்கு 3 தொகுதிகளும் இதர கட்சிகளுக்கு 6 இடங்கள் வரை கிடைக்கும் என்கிறது டைம்ஸ் நவ் எக்ஸிட் போல் முடிவுகள்.