ஜார்க்கண்ட் இறுதி கட்ட தேர்தல் Live- நிறைவடைந்தது ஜார்கண்ட் சட்டசபை தேர்தல்
Recommended Video
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கான 5-வது மற்றும் இறுதி கட்ட வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிவரை சுமார் 62.77% வாக்குகள் பதிவாகி உள்ளன.
ஜார்கண்ட் மாநிலத்தில், தற்போது, பாஜக ஆட்சி நடைபெறுகிறது. ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் தீவிர முனைப்பு காட்டி வருகிறது. இந்த நிலையில்தான், 81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபைக்கு 5 கட்டங்களாகத் தோ்தல் நடைபெறுகிறது. அதில் முதல்கட்டத் தோ்தல் கடந்த மாதம் 30ம் தேதி நடைபெற்றது.
4ம் கட்ட தேர்தல், கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நிலையில் 5வது மற்றும் இறுதிகட்ட தேர்தல் இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. 5 தொகுதிகளில் மதியம் 3 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடையும். மற்ற 11 தொகுதிகளில் மாலை 5 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும்.
எதிர்க்கட்சிகளின் முதல்வர் வேட்பாளரான ஜார்க்கண்ட் முக்தி மோர்சா தலைவர் ஹேமந்த் சரன் உள்பட முக்கிய வேட்பாளர்கள் இந்த தேர்தலில் களத்தில் உள்ளனர்.
Jharkhand: Visuals from a polling booths in Pakur, ahead of voting for Assembly elections. Voting on 16 constituencies in the state for the fifth phase of elections will be held today. #JharkhandAssemblyPolls pic.twitter.com/M80GFuYEFJ
— ANI (@ANI) December 20, 2019