கும்பல் தாக்குதலில் தப்ரேஸ் அன்சாரி இறக்கவில்லையாம்.. ஜார்க்கண்ட் போலீஸ் அந்தர் பல்டி!
Recommended Video
ராஞ்சி: வன்முறை கும்பல் தாக்குதலில் தப்ரேஸ் அன்சாரி இறக்கவில்லை என ஜார்க்கண்ட் போலீசார் தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த ஜூன் 17-ந் தேதி பைக் ஒன்றை திருடியதாக தப்ரேஸ் அன்சாரியை ஒரு கும்பல் கட்டி வைத்து தாக்கியது. மேலும் ஜெய் ஶ்ரீராம், ஜெய் ஹனுமான் என்கிற முழக்கங்களை சொல்லுமாறும் அக்கும்பல் கொடூரமான தாக்குதலை நடத்தியது.
இத்தாக்குதலை தொடர்ந்து சில நாட்களில் தப்ரேஸ் அன்சாரி உயிரிழந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
தப்ரேஸ் அன்சாரி மரணத்துக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக 11 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது குற்றவாளிகள் 11 பேர் மீதான கொலை வழக்கு பிரிவுகள் கைவிடப்பட்டுள்ளன.
விண்ணில் ஏது இந்தியா, பாகிஸ்தான் பிரச்சினை?.. இஸ்ரோவை பாராட்டிய பாக். விண்வெளி வீராங்கனை
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஜார்க்கண்ட் போலீசார், பிரேத பரிசோதனையில் தப்ரேஸ் அன்சாரி மாரடைப்பால் இறந்தார் என கூறப்பட்டுள்ளது. இதனையடுத்தே கொலை வழக்கு பிரிவுகள் கைவிடப்பட்டுள்ளன என கூறியுள்ளனர்.