ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரன் அபாரம்.. போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் வெற்றி
Recommended Video
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்று வரும் சட்டசபை தேர்தலில் ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரன் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்குள்ள 81 தொகுதிகளுக்கு மொத்தம் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று கடந்த வெள்ளிக்கிழமை முடிந்துவிட்டது. இதன் முடிவுகள் இன்று வெளியானது.
இந்த தேர்தலில் ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரன் இரு தொகுதிகளில் போட்டியிட்டார். பர்ஹைத் மற்றும் தும்கா ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டார்.
இதில் தற்போது பர்ஹைத் தொகுதியில் முன்னிலை வகித்து வந்தார். தும்கா தொகுதியில் பின்னடைவை சந்தித்து வந்தார். இவர் ஏற்கெனவே கடந்த தேர்தலில் பர்ஹைத் தொகுதியின் எம்எல்ஏவாக வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் காங்கிரஸ் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் ஹேமந்த் சோரன் 2 தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளார். தும்கா தொகுதியில் ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரன் 13188 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பர்ஹைத் தொகுதியிலும் 25,740 வாக்குகள் வித்தியாசத்தில் ஹேமந்த் சோரன் வெற்றி பெற்றார்.
2-ஆவது முறையாக பர்ஹைத் தொகுதியின் எம்எல்ஏவாக ஹேமந்த் சோரன் வெற்றி பெற்றுள்ளார்.