மத்திய அமைச்சர் நரேந்திர தோமருக்கு ராஞ்சியில் கறுப்பு கொடி! பாஜக- ஜே.எம்.எம். மோதல்!!
ராஞ்சி: மத்திய அமைச்சர் நரேந்திர தோமருக்கு ராஞ்சியில் கறுப்பு காட்டி எதிர்ப்பு தெரிவித்ததால் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவினருக்கும் பாஜகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி சில நாட்களுக்கு முன்பு ஜார்கண்ட் மாநிலத்தில் விழா ஒன்றில் கலந்து கொண்டார்.. இதில் மோடியுடன் முதல்வர் ஹேமந்த் சோரன் ஒரே மேடையில் கலந்து கொண்டார்.
அப்போது ஹேமந்த் சோரன் பேசுகையில், நரேந்திர மோடிக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதற்கு மேடையிலேயே மோடி முன்னிலையிலேயே ஹேமந்த் சோரன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து விமர்சித்தார்.
இது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தொண்டர்களை கொந்தளிக்க வைத்தது. இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மத்திய அமைச்சர் நரேந்திர தோமர் இன்று விமான நிலையத்துக்கு வந்த போது ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினர் கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதைதொடர்ந்து அங்கு திரண்டிருந்த பாரதிய ஜனதா கட்சியினருக்கும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால் போலீசார் தடியடி நடத்தி இருதரப்பினரையும் கலைந்து போகச் செய்தனர்.