For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியையை பலாத்காரம் செய்த மாணவர்

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியை ஒருவர் மாணவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

JNU professor raped by PhD student, accused arrested

டெல்லியில் உள்ளது ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம். பிரபலமான அந்த பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக இருக்கும் ஒருவர் 30 வயது மாணவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். பி.ஹெச்.டி. மாணவரான அவர் தான் நேபாள அமைச்சரின் மகன் என்றும், நல்ல வேலை வாங்கிக் கொடுப்பதாகவும் பேராசிரியையிடம் தெரிவித்துள்ளார்.

தன்னை சீரழித்த மாணவன் மீது பேராசிரியை கடந்த 23ம் தேதி டெல்லி வசந்த் கஞ்ச் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவரை கைது செய்தனர்.

ஒரு பிரபல பல்கலைக்கழக பேராசிரியை மாணவரால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தான் ஆட்சிக்கு வந்தால் டெல்லியில் பாலியல் பலாத்காரம் நடக்காமல் தடுத்து நிறுத்துவேன் என்று ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்திருந்தார்.

அவர் ஆட்சிக்கு வந்த பிறகும் டெல்லியில் பலாத்கார சம்பவங்கள் தொடர்ந்து நடக்கத் தான் செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A female professor of reputed Jawaharlal Nehru University was raped by a Ph.D. student.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X