மான் வேட்டை வழக்கில் நடிகர் சல்மான் கானுக்கு ஜாமீன்
மான் வேட்டையாடிய வழக்கில் இந்தி நடிகர் சல்மான் கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
Recommended Video
ஜோத்பூர்: மான் வேட்டையாடிய வழக்கில் இந்தி நடிகர் சல்மான் கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
1998-ம் ஆண்டு படப்பிடிப்பின் போது இந்தி நடிகர் சல்மான்கான் மானை வேட்டையாடியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஜோத்பூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
மான்வேட்டை வழக்கில் சல்மான்கான் குற்றவாளி என நீதிபதி அறிவித்தார். அவரை தவிர மற்ற அனைவரும் விடுவிக்கப்பட்டனர். சில மணிநேரத்திற்கு பின்னர் சல்மானுக்கான தண்டனை விபரங்களை நீதிபதி அறிவித்தார்.
5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் அவருக்கு விதிக்கப்பட்டது. இதனை அடுத்து, அவர் உடனடியாக சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதைத்தொடர்ந்து அவரது தரப்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அவரது ஜாமீன் மனுவை ஏற்று ஜோத்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது