For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெய்லருடன் உறவு.. ஏகப்பட்ட போட்டோக்கள்.. யார் அவர்.. மட்டன்சூப் ஜோலியை விட்டு விலகாத மர்மங்கள்!

டெய்லர் பெண் ஒருவருடன் ஜோலிக்கு உறவு இருந்ததாக கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    Jolly Koodathayi Kerala Serial killer used to do Satan Poojas

    கோழிக்கோடு: மட்டன்சூப் புகழ் ஜோலி தவறாமல் சர்ச்சுக்கு போவாராம்.. இவருக்கு ஒரு டெய்லருடன் தொடர்பு இருந்திருக்கிறது.. அந்த டெய்லரை இப்போது காணோம். அவரைதான் போலீசார் தேடி வருகிறார்கள்.

    2002 முதல் 2016 வரை கணவர் ராய் தாமஸ், மாமனார் டோம் தாமஸ், மாமியார் அன்னம்மா உள்பட 6 பேர் அடுத்தடுத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக போலீசார் அந்த வீட்டு மருமகள் ஜோலியை கைது செய்துள்ளனர்.

    இவருடன் உறவினர் மேத்யூ, நகைக்கடை ஊழியர் பிரஜிகுமார் ஆகியோரையும் கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரு வார காலம் போலீஸ் கஸ்டடியில் இருந்தனர். அப்போது தினந்தோறும் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருந்தது. இப்போது திரும்பவும் அவர்களை விசாரிக்க 3 நாள் அனுமதி வேண்டும் என்று கேட்க, கோர்ட்டும் அதற்கு அனுமதி தந்துள்ளது. அதன்படி 2-ம் கட்ட விசாரணை நடந்து வருகிறது.

    ஜோலி

    ஜோலி

    இதில் ஜோலி தவறாமல் சர்ச்க்கு செல்லக்கூடியவர் என்கிறார்கள். எல்லோரிடமும் ஜோலி அன்பாக பழகுவாராம்.. நிறைய ஜோக் அடித்து பேசுவாராம்.. தன் ஹேண்ட் பேக்கில் எப்பவுமே லிப்ஸ்டிக், பவுடர் என குட்டி மேக்அப் அயிட்டம் வைத்திருப்பாராம்.

     அடையாள அட்டை

    அடையாள அட்டை

    என்.ஐ.டியில் புரொபசர் என்று நம்ப வைத்துள்ளார். இதற்கான அடையாள அட்டையையும் பர்ஸில் வைத்திருந்து இருக்கிறார். ஆனால், அந்த என்ஐடி பக்கத்துலேயே ஒரு டெய்லர் கடை இருக்கிறதாம். அங்கு ஒரு பெண் வேலை பார்த்து வந்துள்ளார். அந்த டெய்லர் பெண்ணுக்கும் ஜோலிக்கும் நிறைய நெருக்கமாம்.

     டெய்லர்

    டெய்லர்

    இது ஜோலியின் செல்போனை ஆராய்ந்ததில் வெளிவந்த தகவல் ஆகும். அந்த செல்போனில் டெய்லருடன் ஜோலி நிறைய போட்டோக்களை ஒன்றாக ஜோடி போட்டு எடுத்திருக்கிறார். அதனால் இந்த டெய்லரை பிடித்தால் நிறைய விஷயம் வெளியே வரும் என்று போலீசார் சென்று பார்த்ததில், டெய்லர் மாயமாகிவிட்டார்.

    விசாரணை

    விசாரணை

    அந்த டெய்லர் கடையும் அங்கு இப்போது இல்லை. அநேகமாக அந்தப்பெண்ணுக்கு இந்தக் கொலைகள் குறித்து நிறைய தெரிந்திருக்கும் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். ஆரம்பத்தில் இருந்தே இந்த வழக்கில் புது புது தகவல்கள் வெளியாகி கொண்டே இருப்பதால், ஜோலியின் வழக்கு விசாரணை நீண்டு கொண்டே போகிறது.

    English summary
    serial killer jolly had an friendship with the female tailor and The police have received photos of it
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X