இது வெறும் சாம்பிள்தான்.. இனிமேல் தான் உண்மையான ஆக்ஷனே.. பிரதமர் மோடி அதிரடி
டெல்லி: முத்தலாக் தடை, சிஏஏ, ராமர் கோயில் கட்டுதல், கார்ப்பரேட் வரி குறைப்பு உளிட்ட அரசு பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. இவை எல்லமே சாம்பிள் தான் இனிமேல் தான் உண்மையான ஆக்ஷனே ஆரம்பிக்க போகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் டைம்ஸ் நவ்வின் முதல் உச்சி மாநாட்டில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறுகையில், நாட்டில் 1.5 கோடி மக்கள் மட்டுமே வருமான வரி கட்டுகிறார்கள்.
பலர் வழி செலுத்தாத போதும, அதை தவிர்ப்பதற்கான வழிகளை கண்டறியும் போது, நேர்மையாக வரி செலுத்துவோரின் தலையில் கூடுதல் சுமை விழுகிறது. எனவே தேசத்தின் சுதந்திரத்திற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களின் தியாகத்தை மனதில் வைத்து நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வரிகளை நேர்மையாக செலுத்துவதாக உறுதிமொழி எடுக்க வேண்டும்.
காஷ்மீர் டூ குமரி வரை இந்துக்கள்தான்.. காலையிலேயே டிவீட் போட்ட எச்.ராஜா.. குவியும் அதகள கமெண்ட்டுகள்
கவலை அளிக்கிறது
கடந்த ஆண்டு 1.5 கோடி கார்கள் விற்கப்பட்டது, 3 கோடிக்கும் அதிகமானோர் வணிகத்திற்காக அல்லது ஓய்வுக்காக வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளனர். நாடு முழுவதும் வக்கீல்கள், மருத்துவர்கள் மற்றும் ஆடிட்டர்கள் என பல தொழில் வல்லுநர்கள் உள்ளனர், ஆனால் 2,200 தொழில் வல்லுநர்கள் மட்டுமே ஆண்டு வருமானத்தை ரூ .1 கோடிக்கு மேல் உள்ளதாக அறிவித்தனர். எனவே பலர் விரைவில் "உச்சநீதிமன்றத்தை சந்திப்பார்கள்". மக்கள் விடுமுறைக்கு வெளிநாடுகளுக்குச் செல்வதையும், அவர்கள் விரும்பும் கார்களை வாங்குவதையும் பார்க்கும்போது எங்களுக்கு மகிழ்ச்சி. ஆனால் வரி செலுத்தும் எண்ணம் இல்லாததை காணும்போது, அது எனக்கு கவலை அளிக்கிறது.
வரி துன்புறுத்தல்
"இனி மோசமான விளையாட்டிற்கு இடமில்லை" . "வரி துன்புறுத்தல் என்பது கடந்த காலத்தின் ஒரு விஷயமாக இருக்கும், இப்போது இந்தியா தொழில்நுட்ப உதவியுடன் வரி ஊக்கத்தை நோக்கி நகர்ந்துள்ளது. வரி நிர்வாகம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. வரி செலுத்துவோர்களை அதிகம் கொண்ட ஒரு சில நாடுகளின் கிளப்பில் இந்தியா நுழைந்துள்ளது
இந்திய பொருளாதாரம்
நமது நாட்டின் 75வது சுதந்திர தினத்தை நாம் 2022 ஆம் ஆண்டில் கொண்டாடுவோம். உங்களின் தனிப்பட்ட நோக்கங்களை இந்த மாபெரும் சந்தர்ப்பத்துடன் சீரமைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். பொருளாதார வளர்ச்சிக்கு அழுத்தம் கொடுக்க சிறிய நகரங்களில் கவனம் செலுத்துவது இதுவே முதல்முறை. இனியும் நம் நாடு நேரத்தை வீணடிக்காது. நம்பிக்கையுடன் முன்னேறும். 5லட்சம் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை எட்ட இந்த பட்ஜெட் உதவும்.
ராமர் கோயில்
கடந்த 8 வருடங்களில் பல சிறப்பு மிக்க முடிவுகளை எடுத்துள்ளோம். நடுத்தர வர்க்கத்திற்கு சிறப்பு நிதியம் உருவாக்கியது. சீட்டு நிறுவனங்களை ஒழுங்குபடுத்தியது. குழந்தைகளுக்கு எதிராக கொடுமைகளை தடுக்க சட்டத்தை கடுமையாக்கியது, முத்தலாக் தடை சட்டம், கார்ப்பரேட் வரி குறைப்பு, ரபேல் விமானம் வாங்கியது ராமர் கோயில் கட்டுதல், குடியுரிமை திருத்த சட்டம் என அரசு பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.
வெறும் சாம்பிள்
இவை எல்லாம் வெறும் சாம்பிள் தான். இனிமேல் தான் உண்மையான ஆக்ஷனே ஆரம்பிக்க போகிறது. இதுபோன்ற எண்ணற்ற முடிவுகளை இடைவிடாமல் என்னால் எடுக்க முடியும்.அவைகள் வெறும் சதமாக இருக்காது, இரட்டை சதமாக இருக்கும். உங்கள் உச்சிமாநாட்டின் கருப்பொருள் இந்தியா செயல் திட்டம் 2020 ஆகும், ஆனால் இந்தியா இப்போது முழு 10 ஆண்டுகளுக்குமான செயல் திட்டங்களில் செயல்பட்டு வருகிறது. ஆம், டி -20 பாணி வடிவமைபுடன் செயல்திட்டங்கள் இருக்கும், ஆனால் நிலையான செயல்திறனை உறுதிசெய்தல், புதிய பதிவுகளை உருவாக்குதல் மற்றும் தயாரிப்பது என இது இந்தியாவின் தொடராக இருக்கும். உலகின் மிக இளைய நாடு மிக வேகமாக விளையாடும் மனநிலையில் உள்ளது" இவ்வாறு கூறினார்.