For Daily Alerts
Just In
நீதிபதி ஏ.கே. கங்குலியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: சுஷ்மா வலியுறுத்தல்
பெண் வழக்கறிஞருக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கங்குலி மீது புகார் உள்ளது. புகாரில் சிக்கி உள்ள கங்குலி, மேற்கு வங்க மனித உரிமை கமிஷன் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று, பா.ஜ.க., திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கோரி வருகின்றன.
இந்த நிலையில் லோக்சபாவில் இன்று பேசிய எதிர்க்கட்சித்தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், மேற்கு வங்க மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவராக உள்ள கங்குலி ராஜினாமா செய்யாவிட்டால் மத்திய அரசு அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறினார்.
இதையடுத்து, எதிர்க்கட்சிகளின் கடும் அமளியை தொடர்ந்து மக்களவை வரும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.
Comments
English summary
Demands for the resignation of former Supreme Court judge AK Ganguly, indicted in a sexual harassment case, were raised strongly in Parliament today as several MPs raised slogans of 'we want justice" in the Lok Sabha.
Story first published: Friday, December 13, 2013, 16:38 [IST]