For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுப்ரீம்கோர்ட் புதிய தலைமை நீதிபதியாகிறார் டி.எஸ். தாக்கூர்... ஹெச்.எல். தத்து டிச.2- ல் ஓய்வு!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி தத்து ஓய்வுபெறும் நிலையில் புதிய தலைமை நீதிபதியாக டி.எஸ். தாக்கூர் பொறுப்பேற்க இருக்கிறார்.

உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபத் ஹெச்.எல். தத்து, டிசம்பர் 2-ந் தேதி ஓய்வு பெற உள்ளார். இதைத் தொடர்ந்து மரபுகளின்படி புதிய தலைமை நீதிபதியாக டி.எஸ். தாக்கூரை தத்து பரிந்துரை செய்துள்ளார்.

Justice TS Thakur to be next CJI

தலைமை நீதிபதி தத்துவின் பரிந்துரையை மத்திய அரசு பரிசீலித்து ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்ற பின்னர் புதிய தலைமை நீதிபதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் தலைமை நீதிபதியாக இருந்த டி.எஸ். தாக்கூர், 2009ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.

நீதிபதி தாகூரின் பணிக்காலம் இன்னும் ஓராண்டு ஒரு மாதம் இருக்கிறது. அவர் 2017ஆம் ஆண்டு ஜனவரி 3-ந் தேதி ஓய்வு பெற உள்ளார்.

டி.எஸ். தாக்கூருக்கு அடுத்த நிலையில் இருக்கும் நீதிபதி அனில் ஆர். தவே, வரும் 18-ந் தேதியுடன் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். இதனால் டி.எஸ். தாக்கூருக்குப் பிறகு அடுத்த நிலையில் இருக்கும் நீதிபதி ஜெகதீஷ் சிங் கேஹர் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக 2017ஆம் ஆண்டு ஜனவரியில் நியமிக்கப்படுவார்.

English summary
Justice TS Thakur will be the next Chief Justice of India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X