For Daily Alerts
Just In
தெலுங்கானா முதல்வர் பதவியேற்பு விழா- 'சீமாந்திரா" முதல்வருக்கு அழைப்பு இல்லை!
ஹைதராபாத்: தெலுங்கானாவின் முதலாவது முதல்வராக பதவியேற்கும் விழாவுக்கு சீமாந்திராவின் முதல்வர் சந்திரபாபு நாயுடு அழைக்கப்படமாட்டார் என்று கூறப்படுகிறது.
தெலுங்கானா தனி மாநிலத்தின் முதலாவது முதல்வராக ஜூன் 2-ந் தேதி சந்திரசேகர் ராவ் பதவியேற்க உள்ளார். இந்த பதவியேற்பு விழா குறித்து சந்திரசேகர் ராவின் நெருங்கிய சகாவான ராவ் கூறுகையில், தெலுங்கானாவுக்காக உயிர் நீத்த போராளிகளின் குடும்பத்தினரை மட்டும்தான் அழைக்க இருக்கிறோம்.
வேறு எந்த ஒரு தேசிய தலைவரையோ சந்திரபாபு நாயுடுவையோ நாங்கள் அழைக்கவில்லை என்றார்.
இதேபோல் ஜூன் 8-ந் தேதி குண்டூர் அருகே நடைபெறும் பதவியேற்பு விழாவுக்கு சந்திரசேகர் ராவுக்கு சீமாந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் அழைப்பு விடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
Comments
seemandhra telangana chandrashekar rao chandrababu naidu சீமாந்திரா தெலுங்கானா சந்திரசேகர் ராவ் சந்திரபாபு நாயுடு
English summary
Hyderabad: As expected, Telangana CM-designate K. Chandrasekhar Rao is not inviting his Seemandhra counter part N. Chandrababu Naidu for his swearing-in as first Chief Minister of newly carved Telangana state on June 2. This was confirmed from his close confidants on Thursday.