For Quick Alerts
For Daily Alerts
Just In
அமைதிக்கான நோபல் பரிசை நாட்டுக்கு அர்ப்பணித்த கைலாஷ் சத்தியார்த்தி!
டெல்லி: அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியரான கைலாஷ் சத்தியார்த்தி, அந்தப் பதக்கத்தை நாட்டுக்கு அர்ப்பணம் செய்து குடியரசுத்தலைவரிடம் வழங்கியுள்ளார்.
டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்த கைலாஷ் சத்தியார்த்தி தான் பெற்றிருந்த நோபல் பரிசுக்கான பதக்கத்தை வழங்கினார்.
நாட்டிற்கு அர்ப்பணிக்கும் நோக்கில் கைலாஷ் சத்தியார்த்தி கொடுத்துள்ள நோபல் பரிசு பதக்கம் குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்படும் என்று பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
குழந்தை தொழிலாளர் ஒழிப்புக்காக பணியாற்றியதற்காக நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்தியார்த்தி அதனை நாட்டிற்கு அர்ப்பணித்து வழங்கியதை பிரணாப் முகர்ஜி வரவேற்றுள்ளார்.
Comments
English summary
Visitors to Rashtrapati Bhavan will now be able to get a glimpse of the Nobel Peace Prize received by child rights activist Kailash Satyarthi, who dedicated the honour to the nation by presenting his medal to President Pranab Mukherjee in New Delhi today.
Story first published: Thursday, January 8, 2015, 14:20 [IST]