கான்பூரில் பயங்கரம்: 18 நாள் பச்சிளம் குழந்தையை 3-வது மாடியில் இருந்து தூக்கி வீசிய அத்தை- வீடியோ
கான்பூர்: உத்தரப்பிரதேசத்தின் கான்பூரில் மருத்துவமனை ஒன்றின் 3-வது மாடியில் இருந்து 18 நாள் பச்சிளம் குழந்தையை அத்தையே தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கான்பூர் ஷியாம் மருத்துவமனையில் ஞாயிறன்று அதிகாலை சரிதா என்ற பெண் திடீரென அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தையை காணவில்லை என அலறியுள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து மருத்துவமனை முழுவதும் குழந்தையை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. அப்போது பச்சிளம் குழந்தையின் அழுகுரல் சப்தம் கேட்க அப்பகுதியை நோக்கி மருத்துவமனை ஊழியர்கள் ஓடியுள்ளனர்.
CCTV footage: Aunt throws 18 day old infant from 3rd floor of hospital building in Kanpur, infant survives. pic.twitter.com/5As1XICx8j
— ANI UP (@ANINewsUP) September 6, 2016
அக்குழந்தை அந்தரத்தில் குரங்குகள் வருவதைத் தடுக்க போடப்பட்ட கம்பிவலைகளில் துணியுடன் சிக்கி உயிருடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் மருத்துவமனையின் சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போதுதான் சரிதா, குழந்தை அன்மோலுடன் வார்டை விட்டு வெளியே வருகிறார். பின்னர் குழந்தை இல்லாமல் வார்டுக்கு திரும்பியது தெரியவந்தது. பின்னர் சரிதாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பொறாமையில் தூக்கி வீசினேன் என கூறி அதிரவைத்துள்ளார். தற்போது சரிதா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.