இளைஞர்களை ஊக்குவிக்கும் சாத்-7 கிரிக்கெட் திருவிழா.. கபில் தேவ் தொடங்கி வைத்தார்
இளம் தலைமுறைக்கு கிரிக்கெட்டில் திறமையை வளர்க்கும் விதமாக சாத்:7 போட்டித்தொடர், கிரிக்கெட் மகோத்சவ் அதாவது பெரிய திருவிழா என்ற பெயரில், அமைகிறது.
டெல்லி: கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ், சாத்:7 என்ற கிரிக்கெட் தொடரை தொடங்கி வைத்தார்.
இளம் தலைமுறைக்கு கிரிக்கெட்டில் திறமையை வளர்க்கும் விதமாக சாத்:7 போட்டித்தொடர், கிரிக்கெட் மகோத்சவ் அதாவது பெரிய திருவிழா என்ற பெயரில், அமைய உள்ளது.
நாடு முழுக்க இருந்து மொத்தம் 39,840 பங்கேற்பாளர்கள் இந்த தொடரில் ஆட உள்ளனர். 7 ஓவர்கள் கொண்ட போட்டித்தொடராக இது அமையும். ஒரு அணியில், 7 வீரர்கள்தான் ஆட முடியும். முதல் பரிசு பெறும் அணிக்கு ரூ.3,50,000 மற்றும் 2வது பரிசு பெறும் அணிக்கு ரூ.1,40,000 பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
அணியில் ஒரு பெண் இடம் பெற்றிருந்தால் அந்த அணிக்கு 7 ரன்கள் எக்ஸ்ட்ராவாக வழங்கி ஊக்கம் தரப்படும். இந்த போட்டித்தொடர் குறித்த முழு விவரத்தையும் டெல்லியில் பத்திரிகையாளர்களிடம் கபில் தேவ் பகிர்ந்து கொண்டார். அதுகுறித்த வீடியோ செய்தியில் இணைக்கப்பட்டுள்ளது. நீங்களும் காணலாம்.